Tuesday, March 12, 2013

உன்னை என் எதிரில்
பார்க்கவில்லை
என்றாலும்..!
உன்னை என்
வாழ் நாட்கள் முழுதும்
எதிர் பார்த்து இருப்பேன்
உன் அன்புக்காக..
உயிரில்லா மெளனங்களை விட
உன் உரிமைக் கோபங்களை
ரசிக்க பழகுகிறேன்
ஏனென்றால்..!
நீ எனக்கு மட்டுமே சொந்தம்
என்பதால்.
உன்னை அதிகமாய் நேசிப்பதால்
தான் என்னவோ
உன்னை அதிகமாய் வெறுப்பதாய்
நடித்துக் கொள்கிறேன்...