Sunday, May 27, 2012

பெண்களும்,சமூகமும்:
________________________
நீண்ட காலமாகவே சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமையும்,சமூக அந்தஸ்தும் மறுக்கப்பட்டு வந்தன.இருந்தாலும் பண்டையகாலத்தில் அடக்குமுறைகளையும் மீறி சில பெண்கள் சமுதாய மாற்றத்திற்கும்,சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.அந்த காலத்தில் ஔவையார் போன்ற பெண்கவிஞர்களை கூற்லாம்.
பெண்களின் குணங்கள் நீரை போன்றவை.நீரை எதில் நிரப்பினாலும் அந்த உருவதிற்கு மாறுகிறதோ,அதே போல் பெண்கள் எந்த இடத்திலும் தன்னுடைய சகிப்பு தன்மையால் அந்த சூழ்நிலக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிகொள்வார்கள்.அதேபோல் மன உறுதியுலும்ஆண்களைவிட,பெண்களே உயர்ந்தவர்கள் என நான் கூறுவேன்.திருமண காலம் வரை த்ன்னுடைய தந்தை வீட்டில் இருந்துவிட்டு பிறகு தன்னுடைய கணவன் வீட்டிற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிகொள்வது சாதாரண விசயம் இல்லை என்றே நான் நினக்கிறேன்.மேலும் பத்துமாதம் ஒரு குழந்தையை கருவில் சுமந்து,கணவருக்கு நல்ல தாரமாய்,குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாய்,பெற்றவர்களுக்கு நல்ல் மகளாய்,புகுந்த வீட்டுக்கு நல்ல மருமகளாய் விளங்கிறார்கள்.
நம்மை பெற்றதாய் பெண்,நம்முடன் கூடபிறந்தவர்கள் பெண்,நமது துணவி பெண்,நமக்கு பிறந்த குழந்தையோ,பிறக்கபோகும் குழந்தையோ பெண்ணாக இருக்காலாம்.ஆதாலால் வாழ்வில் நம் கடந்து போகும் பாதையில்,தன் தாயிலிருந்து எத்தனையோ பெண்கலின் தோழமை நம் வாழ்வில் வழிகட்டுதலும்,உயர்வும் கிடைக்கிறது.பெண்மையை போற்றுவோம்,மதிப்போம்.
நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி?
--------------------------------------------------
மொத்தம் ஒன்பது முறை நவக்கிரகங்களைச் சுற்ற வேண்டும். ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும். ஏனெனில், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே, இந்த ஏழு கிரகங்களை வலமாக சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே, கடைசி இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்றி வர வேண்டும்.

நவக்கிரங்களில் ஜாதகருக்கு சனி மட்டும்தான் அதிக தொல்லைகளை கொடுப்பவர்.மேலும் சனி மட்டும்தான் ஒரு ராசியில்,மற்ற கிரகங்களைவிட அதிக நாட்கள் இருப்பவர்.அத்னால் நவக்கிரங்களை சனிக்கிழமை வழிபடலாம்.நவக்கிரகங்களை வாரம் ஒருமுறை வழிப்பட்டால் போதும்

சனீஸ்வரனை நாம் நேரிடையாக பார்க்ககூடாது,இருந்தாலும் நவக்கிரங்களை சுற்றும்பொழுதோ அல்லது சனிக்கு அர்ச்சினை செய்யும்பொழுதோ,சனீஸ்வரன பார்க்காமல் இருக்க முடியாது,ஆதலால் நவக்கிரகங்களை வழிபட்டு முடித்தபிறகு,சனீஸ்வரனை நேரிடையாக பார்த்த் தோசம் நீங்க எள்ளும்,ந்ல்ல எண்ணெயில் விளக்கும் ஏற்ற வேண்டும்.
ஐயனாரும்,ஐயப்பனும் ஒன்றா?
------------------------------------------
ஐயனார் அல்லது அய்யனார் ஒரு நாட்டுப்புறக் காவல் தெய்வம். பழங்காலம் தொட்டே ஐயனார் வழிபாடு தமிழர் இடையே இருந்து வருகிறது. குறிப்பாக மதுரையிலும் சுற்றியுள்ள சிற்றூர்களிலும் இது தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஐயனார் வழிபாட்டைச் சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.
ஐயனார் வழிபாடு பிராமணிய இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டது. குறிப்பாக பிராமணப் பூசாரிகள் ஐயனார் கோவில்களில் பூசைகள், சடங்குகள் செய்வதில்லை.
சிவனுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயனார்.
காட்டுக்குள்ளே கண்மாய்க்கரையில் ஐயனார் மாசி மாதம் தேய்பிறையில் அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி அன்று பிறந்தார்
ஐயனாருக்குப் பூர்ணாதேவி, புஸ்கலாதேவி என இரண்டு தேவியர் உள்ளனர், ஐயனார் தேவலோகத்தைச் சேர்ந்தவர். பூலோகத்தில் அவதரித்தவர். எனவே தேவலோகத்தைச் சேர்ந்த புஸ்கலாதேவியும் பூலோகத்தைச் சேர்ந்த பூர்ணாதேவியும் துணைவியராக உள்ளனர்.சில ஊர்களில் தேவியர்களுடன் சேர்ந்திருக்காமல், ஐயனார் தனித்தும் இருக்கிறார். இவ்வாறாகத் தனித்து இருக்கும் ஐயனாரை பாலசாஸ்தா என்று அழைக்கின்றனர்.
ஐயனார் சைவ உணவு உண்பவர். சர்க்கரைப் பொங்கல் படைக்கப்படும். ஆனால் இவரது பரிவார தெய்வங்களுக்கு மதுபானங்கள் வைத்து ஆடு, கோழி பலியிடுகின்றனர். பலியிடும்போது ஐயனார் சன்னதியை மூடிவைத்து விடுவார்கள், அல்லது திரையிட்டு விடுவார்கள். கிராமங்களில் துணியை வைத்து ஐயனாரை மறைத்துவிடுகிறார்கள்.
சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர்கள் என்ற அடிப்படையில் ஐயனாரும் ஐயப்பனும் ஒருவரே. இக்கருத்தானது, தனித்து இருக்கும் பாலசாஸ்தா என்ற ஐயனாருக்கும் ஐயப்பனுக்குமே பொருந்தும்.
ஐயனார் என்பவர் தெய்வம், மனித அவதாரம் எடுக்காதவர். ஆனால், ஐயப்பன் மனிதனாகப் பிறந்தவர். ஐயனார் கண்மாய்க்கரையில் தெய்வமாகப் பரமேசுவரன் மோகினியால் தோற்றுவிக்கப் பெற்றவர். ஆனால், ஐயப்பன் காட்டில் குழந்தையாகக் கண்டெடுக்கப் பெற்று அரசனால் வளர்க்கப் பெற்றவர். ஐயனார் ஒரு குடும்பஸ்தர். இரண்டு தேவியருடனும் பரிவார தெய்வங்களுடனும் உள்ளவர். ஆனால் ஐயப்பன் ஒரு யோகி. சீவசமாதியில் நித்தியயோகியாய் இன்றும் இருப்பவர்.
ஐயனார் இடதுகாலை மடித்து வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பார். ஆனால், ஐயப்பன் இரண்டு கால்களையும் மடித்து முழங்கால்கள் மேலே தூக்கியவாறு இருக்கும்படி அமர்ந்திருப்பார்.
என்னை பொருத்த வரை இரண்டு தெய்வங்களுக்கும்,சற்றே வித்தியாசங்கள் இருந்தாலும்,இரண்டு தெய்வங்களால் கிடைக்கும் அருள் ஒன்றுதான்.
சிதம்பரம் நடராஜர் கோவில்;
-----------------------------------------
சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. 
இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம். 

சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே. 

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.

கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன. 

மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். 


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.

Saturday, May 26, 2012

உன்னைப் போன்ற
சிற்பத்தை
செதுக்க முடியாது 
சிற்பியே
தோற்றுப் போகின்றான் 
தன்
ஜீவனோபாய தொழிலோடு !!!

Friday, May 25, 2012

விண்ணில் 
பவனி வரும்
நிலா
மண்ணில்
உலவுகின்றதே
எனும் ஐயம்
உன்னை
நான்
நேரில் பார்க்கையிலே !!!
என் தோளில்
சாய்ந்து தூங்க
நீயும்
நம் பிள்ளையும்
சண்டை கொள்ளும் நாள்
எப்போது வரும் என்று
காத்துக் கொண்டிருக்கிறேன் !!!
இனியும்
பார்க்காதே
என்னிடம்
இருப்பது
ஒரேயொரு
இதயம் தான் !!!
Copy Right Haran Thanigai
விஞ்ஞானிகளின்
கையில்
அகப்பட்டு விடாதே
இதயம் இல்லாது
உயிர் வாழும்
மனிதம் என்று
உன்னை
பரிசோதிக்௦க
எத்தனிப்பார்கள் !!!
Copy Right Haran Thanigai
உணவு உடை உறையுள் தான்
அத்தியாவசியத் தேவைகள் என்றிருந்தேன் 
உன்னைப் பார்த்த பின்பு தான்
அவைகளோடு உன்னையும் சேர்த்துக் கொண்டேன்
இரு தலையணைகள் கொண்டு
நான் தூங்குவதைப் பொறுக்காது
ஒரு தலையணை வேண்டுமென்று
அடம் பிடிக்கிறாள் என் தங்கை
அதில் ஒரு தலையணை நீ
என்பதைப் புரிந்து கொள்ளாமல் !!!
தாயை இழந்ததும்
தரணியை வெறுத்தேன்
எனக்கு இன்னொரு
தாயாக நீ வருவாய்
என்ற திடசங்கற்பமில்லாமல் !!!
உன் முகத்தைப்
பார்த்த போது தான்
எனக்கு நினைவே 
வந்தது - அன்று
என் அன்னை
உனைக்காட்டித் தான் 
சோறுட்டியுள்ளாள் என்பது !!!
கண் தானம் செய்ய
ஆசைபடுகிறேன்
ஆனாலும் என் மனது 
இடம் கொடுக்கவில்லை
நீ இருக்கும் என் கண்ணை
இன்னொருவருக்கு
தானம் செய்ய !!!
கலிங்கல்
உடைத்து
பாய்வது
குளத்து நீர் 
மட்டுமல்ல
உன் நினைவு சுமந்த
என் கண்ணீர்த் துளிகளும் தான் !!!
இதயம் செயல்பட
எனக்கு
குருதிச் சுற்றோட்டம்
தேவையில்லை
அவள்
நினைவுச் சுற்றோட்டமே
போதும் !!!
சந்திர கிரஹணம்
என்றால்
என் நெஞ்சில்
ஏதோ பதட்டம்
உன்னை
இருள் கூட 
சிறைப்படுத்த
இவணுக்கு
இஸ்டமில்லை !!!
விண்ணில் 
பவனி வரும்
நிலா மண்ணில்
உலவுகின்றதே
எனும் ஐயம்
உன்னை 
நான் 
நேரில் பார்க்கையிலே !!!

Sunday, February 26, 2012

வீணான காலம்

தொலைக் காட்சி
சானலில்
அடிக்கடி
நேரத்தைக்
காட்டுகிறார்கள்
அப்போது
யோசிக்கிறேன்
கடிகாரம்
காட்டுவது
காலத்தை அல்ல
நம் வாழ்வின்
வீணான பாகத்தை !!!

மீட்டர் உயர்வால் வரும் மேட்டர்

பல்கலைக் கழக 
அனுமதிக்கு
பரீட்சைகள்
எழுதி விட்டு
மறு மொழிக்காய்
ஏங்கிய வண்ணம்
காத்திருக்கும்
மாணவர்களைப் போன்று
காத்திருக்க
வேண்டியிருக்கிறது
இலங்கை மின்சார சபையின்
மாதாந்த
மின் கட்டணத் தொகையை
அறிந்து கொள்வதற்கு !

விலைவாசி விளைவு



மாதத்தில்
பதினைந்து
நாட்கள் மட்டும்
வானில்
வலம் வரும்
வெண்ணிலவே
இனிமேலாவது
மாதம்
முழுவதும்
பௌர்ணமி
நிலவாய்
வலம்
வரக் கூடாதா ???
விலைவாசி உயர்வால்
விளக்கு வைக்கக் கூட
நாதியில்லையே !!!
ஏழையின்  அழுகையில் எழுந்த  உணர்வு

நிஜம்

காதல்
எனும் சொல்லுக்கு
என் வாழ்க்கை
அகராதியில்
அர்த்தம் தேடுகின்றேன்
ஆங்கே
"காதல்" எனும் 
சொல்லில்லை 
Haran Thanigai

அழியாத நினைவுகள்

உன்னை
மறந்து விடலாம் என
என் மனம்
நினைத்தாலும்
மரத்து விட்ட
உன் நினைவுகள்
மறுபடியும்
எண்ணத் தோன்றுதடி !!! 
T.Suthaharan
26.02.2012
04.55 pm

Tuesday, January 24, 2012

கும்பாபிஷேக காலத்தில் மிகவும் சிறப்பிற்குரிய தைலாப்பியாங்கம் என்று சொல்லப்படும் எண்ணெய் சாத்துதலின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள்


ஆலய வரலாற்றில் "கும்பாபிசேகம்" என்பது முக்கியமான இறைபணி கொண்ட பெரும் மகா கிரியை ஆகும் .விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால், கும்பாபிசேகம் நடைபெறும் பொழுது தான் விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.

புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.

கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.
கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.
கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப் படும்.
1. தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.
2. கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.
3. ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.
4. கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.

மேற் கூறப்பட்ட கும்பாபிசேக உற்சவத்தில் இவ் எண்ணெய் சாத்தும் நிகழ்வு முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.
எண்ணெய் சாத்துதல் என்பது ?
கும்பாபிஷேகத்தில் உள்ள தனிச்சிறப்பு யாதெனில் எல்லா அடியார்களும்  தொட்டுவணங்கும் நிலையாகிய தைலாப்பியாங்கம் என்படும்; எண்ணெய்க்காப்பு சாத்துதல எண்ணெய்க்காப்பு சாத்துத்தும்; வழிபாடாகும். விரிவாகக் கூறின்; கற்பக்கிரகத்தினுள் சென்று இறைவனது திருமேனியை தெற்பை புல்லினாலே எண்ணெய் சாத்துதல். அத்துடன் இதில் நடைபெறும் கிரியைகள் மற்றை உற்சவங்களில் காணமுடியாது என்பது திண்ணம்.
ஆலய மகோற்சவ காலத்திலோ ஏனைய ஆலயக் கிரியைகளிலோ இறைவனோடு நேரடித் தொடர்பைக் கொண்ட அந்தணர்களால் மட்டுமே விக்கிரகங்களை தொடவும் அபிஷேகம் செய்யவும் ஆராதிக்கவும் உரிமைகள் உண்டு.ஏனெனில் இந்துக் கோயில் சம்பிரதாயத்தைப்  பொறுத்தவரையில் தீட்டு தொடக்கு தீண்டாமை முதலிய பல காரணங்களால் அடியவர்களுக்கு அப்பிடியானதொரு வாய்ப்பு தவறவிடப்படுகின்றது.
இவ்வாறனதொரு தெய்வ சந்தர்ப்பம் அடியவர்களாகிய நமக்கு பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறையும் ஆலயத்தில் ஏதேனும்  புதிதாக கோயில் நிர்மாண வேலைகள் நடைபெற்றால் மட்டுமே கிட்டுகின்றது.
 நாம் இப் பிரபஞ்சத்தில் பிறந்து என்ன பலன் என எம் மனதினுள்ளே மனக் கசப்போடு பலமுறை நொந்திருக்கிறோம். அவ்வாறான மனக் கசப்பின் மருந்தாக தான் நம்மை படைத்த இறைவன் தன்னையே தந்து எண்ணெய் வைக்கும் சந்தர்ப்பத்தை தருகிறான். 
இதுவரையில் நாம் அம்பிகையின் அருமை பெருமைகளையும் சிறப்புக்களையும் பாடி மட்டுமே அருட் கடாசத்தைப் பெற்றிருக்கின்றோம்.அனால் இன்று அம்பிகையை நம் கரங்களால் தொட்டு எண்ணெய் சாத்தி வரத்தை பெறும் பெரிய பாக்கியசாலிகளாக இருக்கின்றோம். 
இவ்வாறானதொரு அதிஷ்ட சந்தர்ப்பம் தான் நம் சொர்க்க பூமியாகிய நயினையம்பதியிலே பாம்பணையில் பள்ளி கொள்ளும் நம் புவனேஸ்வரியின் புண்ணிய பீடமதில் கிடைத்திருக்கின்றது. இவ் எண்ணெய் சாத்தும் நிகழ்வு 25.01.2012 இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி 27.01.2012 அன்று மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது
ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தை நழுவ விடாது அனைத்து அம்பிகை அடியார்களும் அன்னையின் பாதமதை தொட்டு அவள் அருள் வேண்டி அந்தம் வரை அவள் சிந்தனையோடு சிறப்புடன் வாழ வழி  செய்வோம்.
ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !

ஆக்கம் 
அம்பிகை அடியான் 
தணிகாசலம் சுதாகரன் 
25.01.2012
1.20 pm