இழந்தோம் - ஆனாலும்
கவலைகள் மறந்தோம்
தாய்க்குக் தாயாக
நீ இருக்கிறாய்
என்ற பூரிப்பு தான் ...
எத்தனையோ வரம்
நாம் உன்னை
வேண்டுகின்ற போதும்
அத்தனை வரமும்
அளிக்கின்றாய் - ஆனாலும்
அதிலோர்
இறுமாப்பு உனக்கு
எந்த ஒரு வரமும்
எமக்கு எப்பவும்
தாமதமாகவே ..!
வீடு இழந்தோம்
வாசல் இழந்தோம்
புலம் பெயர்ந்தோம்
நோயுற்றோம்
வறுமை வாட்டியது
சிறுவயதில்
எண்ணிய ஆசைகள்
எண்ணிய ஆசைகள்
கானல் நீரானது
ஒன்றா இரண்டா
இழப்பதற்கு
எத்தனை துன்பம் - அம்மா
உன் கண் முன்னே
நாமுற்றோம்
எத்தனை முறை - நீ
எம்மை எட்டி
உதைத்தாலும்
தாய்ப்பசுவைத் தேடி
வரும் கன்றினைப் போல்
உன்னையே நாடிவருவோம்
உனைவிட்டு யாரம்மா
எமக்கு உண்டு ..?
உன் பாதம் சேரும் வரை
எம் தாய்
நீதானம்மா ...
தாயே ..!
நகேஸ்வரியே..!
நம் குறை நீ அறிந்து
நலம் பல பெற்று
நல்லுலகில் நலமுடன் வாழ
எமக்கருள் செய்வாயம்மா .....
ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !
No comments:
Post a Comment