Monday, August 22, 2011

என் இனியவளே !

என் இனியவளே !
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் காதலை உனக்கு
தெரியப்படுத்த வேண்டும்
என்று நினைப்பேன் - ஆனால்
உன்னைப் 
பார்த்தவுடனேயே
மரணித்து விடுகின்றன
வார்த்தைகள் மௌனமாய்
என் நெஞ்சத்துள்

நான் ஒரு
மடையன் தான் - நீ
ருதுவாக முன்னமே
நான் உன்னைக்
காதலிக்கத் தொடங்கியது
பொருந்தாக் காதல்
புரியப் பட்டு  விடாது என்று
பிரிய முயற்சித்தேன்
உன் நினைவுகளை விட்டு ...

பிரத்தியேக கல்வி நிலையத்தில்
நான் ஓர் ஆசிரியனாய்
நீ ஓர் மாணவியாய்
உன் வகுப்பறையின் 
எதிர் வகுப்பறையில்
ஆசிரியர் கற்பிப்பதை 
கவனத்தில் கொள்ளாது
நான் கற்பிக்கும் விதத்தை - நீ
கடைக் கண்ணால்
உற்று ரசித்ததை
என்றுமே மறவேனடி..

யார் உண்ட
எச்சி உணவை நீ 
உண்ணாத போது
என் எச்சிபட்ட 
உணவை மட்டும் 
ஏன் நீ
பறித்துண்டாய் ?

மழைக்கு கூட சிலர்
பாடசாலை தாவாராம்
ஒதுங்க மாட்டார்கள்
என்று நான் கேள்விப் பட்டதுண்டு
ஆனால் நான் 
மழைக் காலம்  கூட 
விட்டு வைப்பதில்லை
உன் வீட்டு முன்னுள்ள
பாதையோரம் ...

காலை எழுந்தவுடன்
கடவுளைக் கைதொழுவேன் 
என் காதலியை
கண் முன்னே
நேர் நிறுத்து என்று
கடவுள் கூட எனக்கு
வஞ்சகம் நினைத்ததில்லை
உன்னை நான்
பார்ப்பதற்கு ..


விதி செய்த 
சதியாலும் 
ஜனம் கொண்ட
பகையாலும்
நாடு விட்டு நாடு
போக வேண்டிய
சூழ்நிலை  உனக்கு 
சென்றாய் எனை விட்டு
தொலைதூரம் ..

காலங்கள் சென்றது
காதோரம் ஓர் செய்தி
நாட்டின் நிலை 
சுமூகமானதால்
நாடு திரும்பி வந்துவிட்டாயாம்
அன்று நான் கொண்டது
அளப்பரிய
சந்தோசம் ..

என்றோ ஒரு நாள்
நான் சொல்லாமலேயே 
என் காதல்
உனக்கு புரியும்
புரியாது விட்டால்
விதி செய்த சூழ்ச்சி 
என எண்ணி
விடைபெறுவேன் 
உன் இனிமையான
நினைவுகளோடு ...


ஆக்கம்
த.சுதாகரன் 
22.08.2011
மாலை 4.30 மணி 

No comments:

Post a Comment