Sunday, May 27, 2012

பெண்களும்,சமூகமும்:
________________________
நீண்ட காலமாகவே சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமையும்,சமூக அந்தஸ்தும் மறுக்கப்பட்டு வந்தன.இருந்தாலும் பண்டையகாலத்தில் அடக்குமுறைகளையும் மீறி சில பெண்கள் சமுதாய மாற்றத்திற்கும்,சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தினார்கள்.அந்த காலத்தில் ஔவையார் போன்ற பெண்கவிஞர்களை கூற்லாம்.
பெண்களின் குணங்கள் நீரை போன்றவை.நீரை எதில் நிரப்பினாலும் அந்த உருவதிற்கு மாறுகிறதோ,அதே போல் பெண்கள் எந்த இடத்திலும் தன்னுடைய சகிப்பு தன்மையால் அந்த சூழ்நிலக்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிகொள்வார்கள்.அதேபோல் மன உறுதியுலும்ஆண்களைவிட,பெண்களே உயர்ந்தவர்கள் என நான் கூறுவேன்.திருமண காலம் வரை த்ன்னுடைய தந்தை வீட்டில் இருந்துவிட்டு பிறகு தன்னுடைய கணவன் வீட்டிற்கு தகுந்தாற்போல் தன்னை மாற்றிகொள்வது சாதாரண விசயம் இல்லை என்றே நான் நினக்கிறேன்.மேலும் பத்துமாதம் ஒரு குழந்தையை கருவில் சுமந்து,கணவருக்கு நல்ல தாரமாய்,குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாய்,பெற்றவர்களுக்கு நல்ல் மகளாய்,புகுந்த வீட்டுக்கு நல்ல மருமகளாய் விளங்கிறார்கள்.
நம்மை பெற்றதாய் பெண்,நம்முடன் கூடபிறந்தவர்கள் பெண்,நமது துணவி பெண்,நமக்கு பிறந்த குழந்தையோ,பிறக்கபோகும் குழந்தையோ பெண்ணாக இருக்காலாம்.ஆதாலால் வாழ்வில் நம் கடந்து போகும் பாதையில்,தன் தாயிலிருந்து எத்தனையோ பெண்கலின் தோழமை நம் வாழ்வில் வழிகட்டுதலும்,உயர்வும் கிடைக்கிறது.பெண்மையை போற்றுவோம்,மதிப்போம்.

No comments:

Post a Comment